Header Ads



தமது அரசியல் நகர்வுக்காக, சிலர் Dr சாபியை பயன்படுத்த முயற்சி

- Anzir - 

தவறுதலாகக் கூட, தன் கையால் ஒரு பிழை நடக்கவில்லை என்ற உறுதிப்பாட்டில் இருக்கும் டாக்டர் சாபியை, சிலர் தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த முயற்சிப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும், தெரிய வருவதாவது,,

பாராளுமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமது அரசியல் சுயலாபம் கருதி சிலர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதங்களில் டாக்டர் சாபி விவகாரமும் ஒன்றாகும்.

டாக்டர் சாபிக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதில், அரச ரேவை ஆணைக்குழு மிகவும் உறுதியாகவும், திட்டவட்டமாகவும் உள்ளது.

எனினும் சுகாதார அமைச்சில் உள்ள சிலர், இதுதொடர்பில் இழுத்தடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் டாக்டர் சாபி, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில், அவரை எப்படியேனும் குற்றவாளியாக்கி தமது செல்வாக்கை தாம் சார்ந்திருக்கும்  தரப்புகளிடம் அதிகரித்துக்கொள்ள, திட்டமிட்டுள்ள குழுக்கள், டாக்டர் சாபி விவகாரம் தொடர்வதையே விரும்புவதாகவும் அறிய வருகிறது.

குறிப்பு - டாக்டர் சாபி விவகாரம் மேலோங்கிய காலத்தில் இருந்து அவரின் விவகாரத்தில் Jaffna Muslim இணையம் கூடிய அக்கறை செலுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

1 comment:

  1. Ya Allah protect this brother from SEITHANs.My opinion if he get back his job then better some while working muslims area.

    ReplyDelete

Powered by Blogger.