Header Ads



மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள், தனித்து போட்டியிட முடியும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு எவரினதும் பிடியில் சிக்க நான் தயாராக இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 

மஹர மற்றும் வத்தளை தொகுதிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும் எனவும், அவ்வாறு இல்லையென்றால் மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.