முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துங்கள்,, நீக்காதீர்கள்...!
இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான சட்டங்கள் இருக்கக் கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் பொதுவான சட்டத்தின் மூலமே ஆளப்பட வேண்டும் என இனவாத பெளத்த குருமார்களினால் நீண்ட காலமாக குரலெழுப்பப்பட்டு வந்துள்ளது.
இந்தக் கோரிக்கை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் ஆரம்பமாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையாகவே இது சமர்பிக்கப்பட்டுள்ளது.
அத்துரலியே ரதன தேரர் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக (பொது) கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையொன்றினையும் சமர்ப்பித்துள்ளார். இச்சட்டத்தின் முகவுரையில் காணப்படும் ‘முஸ்லிம்களின் திருமணம் தவிர்ந்த’ என்ற வசனம் நீக்கப்பட வேண்டுமென பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம் தனியார் சட்டத்தின் மூலமே ஆளப்பட்டு வருகிறார்கள். எமது நாட்டில் இனவாத அமைப்புகளும் பெளத்த குருமாரும் தலையெடுத்ததன் பின்பே முஸ்லிம் தனியார் சட்டம் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
முஸ்லிம் சமூகம் ஒரு தசாப்த காலமாக ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்துள்ளது. அத்திருத்தங்களை கடந்த ஆட்சியில் அமைச்சரவையும் அங்கீகரித்துள்ளது. அத்திருத்தங்கள் சட்டவரைஞர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு காத்திருக்கையில் அச்சட்டத்தை முழுமையாக நீக்கி விடவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது நாட்டில் இன நல்லிணக்கத்துக்கு விழுந்துள்ள பாரிய அடியாகும்.
அத்துரலியே ரதன தேரரின் தனிநபர் பிரேரணை அடிப்படை மனித உரிமை மீறலாகும். உயர் நீதிமன்றில் இதற்கான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துரலியே ரதன தேரரின் தனிநபர் பிரேரணையை தற்போது அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்துள்ளனர். ‘‘இது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கைப் பிரகடனத்துக்கு முரணானது. இப்பிரேரணை மீளப்பெறப்பட வேண்டும்‘‘ என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பிரேரணை விவாதத்துக்கு வந்தால் பல்லினச் சூழலை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
‘ரதன தேரரின் தனிநபர் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. அது தோல்வியிலேயே முடியும்’ என பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அரசாங்க தரப்பில் இப்பிரேரணைக்கு ஆதரவு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
‘ரதன தேரர் இனமுறுகலை உருவாக்க முயற்சிக்கிறார். அவரது பிரேரணை இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் வாழ முடியாது என்ற செய்தியை கூறுவது போன்றுள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் இந்த இனவாத நடவடிக்கையைத் தடுக்க வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ரதன தேரரின் தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் பிரேரணையைத் தோற்கடித்து இனவாதிகளை ஓரம் கட்ட வேண்டும்.
‘முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வு காணப்படும்’ என நீதி சட்ட மறுசீரமைப்பு மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சட்ட திருத்த சிபாரிசு குழுவின் திருத்தங்களும் பாதிப்பற்ற வகையில் நிறைவேற்றப்படும் எனவும் கூறியுள்ளார். அமைச்சரின் உறுதி மொழிகள் முஸ்லிம் சமூகத்தை ஆறுதல் படுத்தியுள்ளன.
முஸ்லிம் சமூகம் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை எதிர்பார்த்திருக்கின்றதேயன்றி அதனை முற்றாக நீக்குவதற்கு ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அரசியல் களத்தில் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரும் ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும், அவர்களுடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli
முஸ்லிம்கள் விவாகச் சட்டங்கள் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளிலும் விவாதங்களும் திருத்தங்களும் இடம் பெறுகின்றன. இவை பற்றிய விவாதங்கள் அவசியம்.முஸ்லிம் விவாகச் சட்டங்கள் தொடர்பாக பெண்ணிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் தரப்பு விவாதங்கள் மட்டும் ஓரளவு முன்வைக்கபட்டுள்ளது. ஏன் சிங்களவர் தமிழர் (குறிப்பாக கிழக்கு தமிழர்) மலையக தமிழர் மத்தியில் முஸ்லிம் விவாக சட்டங்களுக்கு எதிர்புள்ளது என்பதை இதுவரை யாரும் ஆராய்ந்ததில்லை. இது முஸ்லிம் பல்கலைக்களக சமூகத்தின் பணி. ஏனெனில் இதன் மூலம்தான் ஏனைய இனங்க்களோடு ஆக்கபூர்வமான விவாதங்களை முஸ்லிம்கள் ஆரம்பிக்க முடியும். இதுபற்றி நான் சிங்களவர்களோடும் தமிழர் மலையக தமிழர்களோடும் விவாதிதிருக்கிறேன். என் விவாதங்கள் மேற்படி இனங்கள் மத்தியில் நிலவும் முக்கியமான எதிர்ப்பு கோபம் முஸ்லிம் விவாக சட்டத்தின் அடிபடையில் கலப்பு திருமணங்கள் இடம்பெறுவது பற்றியதாகும். மட்டகளப்பு சிறுவயது மாணவி கலப்புத் திருமணத்தினூடாக மூழைச் சலவை செய்யபட்டு தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தபட்டது தொடர்பாகவும் கோபமுடன் விவாதித்தார்கள். சிங்களவர்கள் பலர் ”முஸ்லிம்கள் அச்சத்தில் இலங்கையில் கலப்பு திருமணம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.ஆனால் அரபு நாடுகளில் வைத்து செய்கிறார்கள்” என கொதிப்புடன் கூறினார்கள். மதமாற்றம் செய்யபட்ட பெண்கள் தொடர்பாக எப்போதும் பொதுச்சட்டமே பிரயோகிக்கபட வேண்டுமென்றும் சிலர் சொன்னார்கள். கலப்பு திருமணங்கள் விவாகரத்துக்கள் பொதுசட்டத்தின் கீழ்வரும் என்கிற திருத்தம் வந்தால் மூவினங்கள் மத்தியிலும் எதிர்ப்பு குறைய வாய்புள்ளது. முஸ்லிம்களுக்கு தனி மற்றும் பொது சட்டங்களிடை தெரிவு இருக்கவேண்டும் என்கிற கருத்தை சிங்கள தரப்பினர் வலியுறுத்தினார்கள். கலப்பு திருமண எதிர்ப்பு சிங்களவர் தமிழர் மலையக தமிழர் மத்தியில் பலமாகவும் பரவலாகவும் உள்ளது. பெண்ணிய அமைப்புகளின் எதிர்ப்பும் உள்ளது. இப்பிரச்சினை முக்கிய சிக்கலாக உருவாகி வருகிறதால் முஸ்லிம் பல்கலைக்கழக மற்றும் ஊடகதுறையினர் ஏனைய மூன்று இனத்தவருடனும் ஒரு ஆய்வு கலந்துரையாடல்களில் ஈடுபடுவது அவசியம் என்று தோன்றுகிறது. இல்லவிடின் இனவாதக் கூச்சல்கள்தான் மிஞ்சும்.
ReplyDeleteITHANAIPATRI RISHAD, HAKEEM, MUJIBRAHMAN, FOUZI, EN VAITHIRAKKAVILLAI.
ReplyDeletePITTU THONDAIYIL IRUKIVITTATHAA????
INDA PIRERANAI KONDUVANDA
ReplyDeleteU N P MPKAL IRUVAR.
YAANAIYIN VAALIL THONGIKONDIRUKKU
RISHAD HAKEEM,CHMPIKAVIN
MADIYIL UKKAANDIRUPPAVARKAL.
NAMMA KARADI IRANDUM U N P THAAN.
ஜெயபாலன் ஐயா அவர்களின் கருத்தை ஒரு மனிதன் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் தனிமனித உரிமைக்கு எதிரானதாகவே பார்க்கிறேன்.இஸ்லாத்தில் முஸ்லிமான இருவருக்கு நடக்கும் திருமணத்தான் செல்லுபடியாகும்.எனவே கலப்புத் திருமணம் என்பது இஸ்லாத்தில் இல்லை.விரும்பியவர் இஸ்லாத்திற்கு வந்துதான் திருமணம் முடிக்கலாம் அல்லாது அவர் மார்க்கத்தில் இருந்து கொண்டு இஸ்லாமியர் ஒருவரை திருமணம் முடித்தாலும் அது இஸ்லாமிய திருமண சட்டத்தினுள் வராது.ஆகவே கலப்பு திருமணம் என்று சொல்லி அடுத்த இனமும் தொடர்புபடுகிறது எனச் சொல்லி வேறு சமயத்தவர்கள் இஸ்லாமிய திருமண சட்டத்தில் மூக்கை நுழைப்பது பொருத்தமானதல்ல.இவ்வாறே முஸ்லிமான ஒருவர் ஏனைய சமயத்தைச் சார்ந்தவர்கள் சமயத்திற்குச் சென்று திருமணம் முடித்தால் அதனை இஸ்லாமிய திருமண சட்டத்தோடு பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியமோ அல்லது அவர்கள் கையாளப்படும் சட்டங்களை பரிசீலனை செய்யவேண்டுமெனக் கூற வேண்டிய தேவையோட இல்லை.அது நாகரீகமானது மட்டுமல்ல தர்க்கரீதியானதுமல்ல.
ReplyDeleteMuhammed Ariff அவர்களே. நான் என் கருத்தை சொல்லவில்லை. சிங்களவர் தமிழர் மலையகத் தமிழர் மத்தியில் பரவலாக நிலவும் கர்த்தை ஒரு ஆய்வு மதிப்பீடாகவே முன் வைத்தேன். உங்களுக்கு சுதந்திரம் உள்ளதுபோலவே மறு இன பெற்றோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அவர்அவர்கள் தங்கள் தங்கள் கருத்துபடி முடிவெடுக்கலாம். அல்லது எலோரும் கலந்துரையாடி முடிவுக்கு வரலாம். அவரவர் விருப்பம். நான் ஒரு ஆய்வாளன் மட்டுமே
ReplyDeleteமுஸ்லீம் சட்டங்களை நீக்குவது அல்லது திருத்துவது போன்ற விடயங்களை மேற்கொள்வது
ReplyDeleteபுனித திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்)அவர்களின்
வாழ்க்கைமுறைமை போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறவேண்டும்.இதற்கு இஸ்லாத்தை நன்கு கற்றறிந்தவர்கள் அதற்கான கோரிக்கைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும் அதைவிடுத்து தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விரும்பியவர்களெல்லாம் இதில்
மூக்கை நுழைய முற்பட்டால் விளைவு விபரீதமாகி விடும்.புனித பெளத்த மத சில சட்டங்களையும் அதன்
சித்தாதங்களையும் இல்லாமல் செய்யவேண்டுமென அல்லது அதில் சிலதை மாற்ற வேண்டுமென வேற்று மதத்தவர் ஒருவர் கோருவது எந்த விதத்தில் நியாயமற்றதோ அவ்வாறே இஸ்லாமிய மத சட்டங்களையும் அனுஷ்டானங்களையும் மாற்ற வேண்டும் அல்லது இல்லாமல் செய்ய வேண்டுமென வேற்று மதத்தவர் கோருவது நியாயமாகப்படாது.