Header Ads



நான் ஒரு தனி போராளி, தொடர்ந்து போராடுவேன், வாக்குறுதியை கைவிடாத ஒரேநபர் நான்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அவர் முழுதாக மறுத்துள்ளார்.

தனது உரையாடல்கள் சேமிக்கப்பட்டதால் ஏதேனும் பலனிருந்தால், அது நாட்டிற்கு மட்டுமே கிடைக்கும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

வார இதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

“திருடர்களைப் பிடிப்பதற்கான நல்லாட்சி என்ற வாக்குறுதியை கைவிடாத ஒரே நபர் நான். நான் ஒரு தனி போராளி.

அவ்வாறு செய்யும்போது, ​​நான் பொலிசாருடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுடன், சிஐடியுடன், நீதித்துறையுடன், அரசியல்வாதிகளுடன், விபச்சாரிகளுடன், சிறுமிகளுடன், பாதாள உலகத்துடன் பேச வேண்டும்.

அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்ய வேண்டும்.

நான் பணத்தை கேட்டு மிரட்டுவதற்காக இதை செய்தால், எனக்கு சொந்தமாக வீடு, வாகனம் இருக்க வேண்டுமல்லவா? என்னிடம் எதுவும் இல்லை.

இந்த கிரகத்தில் எனக்கு ஒரு பெர்ச் நிலம் இல்லை. யாரும் என்ன சொன்னாலும், நான் தொடர்ந்து போராடுவேன்.

அந்த குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன். யாரும் என்னை இதுவரை குற்றம் சாட்டவில்லை என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.