Header Ads



அடிப்படைவாதத்திற்கு அடிபணியும், பாராளுமன்றம் நாட்டுக்கு ஒவ்வாது - அக்கிராசன உரையில் ஜனாதிபதி

பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் நான் ஜனாதிபதி என்ற ரீதியில் உறுதி செய்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று -03- காலை ஆரம்பமானது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் நாடாளுமன்றம் எவ்விதத்திலும் நாட்டுக்கு ஒவ்வாது. ஒரு ஸ்திரத் தன்மையுடைய மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நாடாளுமன்றம் உருவாக்கப்படும்.

அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியம்.

இனவாத அரசியலுக்கு நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாத்து ஏனைய மதங்களுக்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் நான் ஜனாதிபதியென்ற ரீதியில் உறுதிசெய்வேன்.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பாதாள குழுக்கள் முற்றாக இல்லாதொழிக்கப்படும்.

மக்கள் நலன் திட்டங்கள் குறித்து நான் நேரடியாக கண்காணிப்பேன். அத்துடன் நாட்டில் வறுமையொழிப்பு என்பது எனது ஆட்சியில் மற்றுமொரு இலக்காகக் காணப்படுகின்றது.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக எனது ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகர் திட்டங்கள் அனைத்துமே தெற்காசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை கொண்டுவருவதற்கான இலக்காகவே அமையப் பெற்றுள்ளன.

அரசியலமைப்பிலும், தேர்தல் முறைமையிலும் கட்டாய திருத்தங்கள் அவசியம். 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை 19 தடவைகள் அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், அரசியல் அமைப்பில் ஒரு ஸ்திரமற்ற தன்மை காணப்படுகின்றமையால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாட்டின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆகவே, அரசியலமைப்பில் கட்டாய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மறுபுறம் தேர்தல் மறைமையிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே மக்கள் இனவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளீர்!

    சஜித் பிரேமதாசாவும் அவர்களுடன் இருப்பவர்களும் 90% மானவர்கள் பௌத்தர்கள் இவர்கள் அனைவரும் எந்த இனவாதிகள் எவ்வாறு?

    அவருக்கும் உங்களுக்கும் வேறுமத சிருபான்மை மக்கள் தங்களின் ஆதரவை வழங்கினார்கள் மாற்றமாக முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிட்டு அவர் ஒரு முஸ்லிம்மென்று தங்களின் வாக்குகளை இனவாத்த்துடன் வாக்களிக்கவே இல்லை

    அவ்வாறே சிவாஜிலிங்கம் ஒரு இந்து தமிழன் என்ற இனவாத்த்துடன் இந்து தமிழ்மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை மாற்றம் இலங்கையில் வாழும் சிருபான்மை இனமான கிரிஸ்தவ,இஸ்லாமிய, இந்துவாகிய மக்கள் அவர்களுக்கு விருப்பமான பௌத்தர்களுக்கு தங்களின் வாக்குகளை கொடுத்ததை எவ்வாறு இனவாதமென்று இங்கு குறிப்பிட்டுள்ளீர்!?

    அப்படியானால் சஜித் பிரேமதாசாவிட்கு வாக்களித்த சுமார் 47 லட்சம் பௌத்தர்களை எவ்வாறு வர்ணிக்கின்றீர்?

    ReplyDelete

Powered by Blogger.