குவாசிம் படுகொலை - பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை
ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நிலையில், இது குறித்து பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
ஈரான் தளபதி குவாசிம் நேற்று முன் தினம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் மூன்று நாட்கள் துக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று -06- அவரின் இறுதிச்சடங்கு தெஹ்ரானில் நடைபெற்றது.
இந்நிலையில் குவாசிம் கொலை செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தால், மத்திய கிழக்கின் பிராந்தியத்தின் அமைதி மற்றும் உறுதியை அச்சுறுத்தியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும், நிலைமையை குறைக்க ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment