சஜித்திடம் அதிருப்தி வெளியிட்ட கரு, ஒன்றிணைந்து தீர்மானம் எடுப்போம் என வலியுறுத்து
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, கூட்டணி அமைப்பதிலும், தலைமைத்துவ நெருக்கடிக்கு தீர்வு காண்பதிலும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுப்போம் என்கிற யோசனையை சஜித் பிரேமதாசவுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினரை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று மாலை சந்தித்தார்.
தலைமைத்துவப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் பிரிந்து செயற்படுவது குறித்து சபாநாயகர் தனது அதிருப்தியை சஜித்திடம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒற்றுமையுடன், எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிகொள்ள பொது அணியாய் போட்டியிடுவது பற்றிய யோசனை ஒன்றையும் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்வைத்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை சந்திக்க முன் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது மேற்குறிப்பிட்ட விடயங்களையே பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment