Header Ads



விளையாடிய நிலையில் மயங்கி, விழுந்த மாணவன் மரணம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு, - பதுளை வீதியை அண்டியுள்ள இலுப்படிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த விமலநாயகம் லூபேசாந் (வயது 15) விளையாடிக்கொண்டிருந்த வேளையில் திடீரென  மயங்கி விழுந்து மரணித்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை 13.01.2020 இவர் விளையாடி விட்டு களைப்புடன் காணப்பட்ட சிறுவன் மயங்கி விழுந்தவுடன் உடனடியாக அவரை கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பிக்கும்பொழுதே அவர் மரணித்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் கைளிக்கப்பட்ட நிலையில் இறுதிச் சடங்கு சிறுவனின் கிராமமான இலுப்படிச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

இச்சிறுவன் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்தவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.