Header Ads



பாக்தாத்தில் உள்ள அமெரிக்க, தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள பசுமை மண்டலத்திற்குள் ராக்கெட் வெடித்ததாக உள்ளூர் பாதுகாப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தகவல்களின்படி, 5 பேர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள பசுமை மண்டலத்திற்குள் ஒரு கத்யுஷா ராக்கெட் தரையிறங்கியதாக உள்ளூர் பொலிஸாரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்களிலே அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பாக்தாத் பகுதியில் பறந்து சென்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பாக்தாத்திற்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாலாட் ஏர் பேஸும் ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஒரு தனி அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தளம் சில அமெரிக்க துருப்புக்களை நடத்துகிறது.

இந்த சம்பவமானது ஈரானிய உயர் இராணுவ அதிகாரி குவாசிம் சுலைமானி, அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்டதற்கு, தீர்க்கமான பதிலடி கொடுப்பதாக ஈரான் எச்சரித்ததை அடுத்து நடந்துள்ளது.

1 comment:

  1. Well done Iran super all america terrorist ilakku meethu thaakuthala natathanum ...

    ReplyDelete

Powered by Blogger.