Header Ads



பெட்­டி­கலோ கெம்பஸ்' சுவீகரிக்கப்பட வேண்டும் - ஆசு மார­சிங்க Mp பிடிவாதம்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்வின் மட்டக்களப்பில் நிர்­மா­ணி­க­கப்­பட்­டுள்ள ‘பெட்­டி­கலோ கெம்பஸ்‘ (மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம்) எனும் கல்வி நிறு­வ­னத்தை அர­சாங்கம் சுவீ­க­ரிக்க வேண்டும் என அக்­கல்வி நிறு­வனம் தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்­றத்தின் கல்விப் பிரிவு செயற்­குழு தெரி­வித்­துள்­ளது.பாரா­ளு­மன்ற கல்­விப்­பி­ரிவு செயற்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ‘குழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், குழுவின் சிபா­ரி­சுக்­க­மைய பட்­டி­கலோ கம்­பஸை அரசு சுவீ­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்கும் என தான் எதிர்­பார்ப்­ப­தா­கவும் குழுவின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பேரா­சி­ரியர் ஆசு மார­சிங்க தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட அறிக்கை இதற்கு முன்பு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆனால் அவரால் குழுவின் சிபா­ரி­சு­களை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாமற் போன­தா­கவும் அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த காலத்தில் அர­சாங்­கத்­துடன் உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்டு பட்­டி­கலோ கம்­பஸை நிறு­வி­யமை சட்­ட­வி­ரோத செய­லாகும். இதன் மூலம் அவர் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைத் தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார். இதற்கு எதி­ராக அவர்­மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அவர் தெரி­வி­ததார்.
ஹிஸ்­புல்லாஹ் சவூதி அரே­பி­யா­வி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற சுமார் 300 கோடி நிதியின் மூலம் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தை நிறு­வி­யுள்­ளதால் இந்த நிதி எந்த அடிப்­ப­டையில் கிடைத்­தது என்­பது தொடர்பில் சந்­தேகம் நில­வு­வ­தாக கடந்த காலத்தில் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்பு இந்த நிறு­வ­னத்­துக்கு எதி­ராக பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­துடன், உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற விசேட தெரிவுக் குழு முன்­னி­லை­யிலும் சாட்­சி­ய­ம­ளிக்க ஹிஸ்­புல்லாஹ் அழைக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

2 comments:

  1. எல்லாவற்றையும் வாயால் சொல்லிவிடலாம். ஆசு மாரசிங்க எதன் அடிப்படையில் Batticaloa Campus ஐ சுவீகரிக்க வேண்டுமென்று சொல்கின்றார். அப்படியானால் இலங்கையிலுள்ள சகல தனியார் கல்வி நிறுவனங்களையும் சுவீகரிக்க வேண்டும். ஹிஸ்புல்லாவின் Campus நாட்டிற்குத் தேவையில்லாவிட்டால் அதனை அவரிடம் சொன்னால் அவர தன் இஷ்டப்படிக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். இல்லாவிட்டால் Campus இனை அமைத்ததன் மூலம் ஹிஸ்புல்லாவிற்கு பல பொறுப்புகள் இருந்திருக்கும் 300 கோடி ரூபாவினை அவர எந்த அடிப்படையில் பெற்றார் என்பதனை ஆராய்ந்து அதனை மீள உரியவர்களுக்கு செலுத்திவிட்டு சட்டம் சரி எனச் சொன்னால் அந்த Campus ஐ சுவீகரிக்கலாம் அப்படிச் செய்கின்றபோது எதிர்காலத்தில் தனியார் எவரும் இந்த நாட்டில் உயர் கல்விக்கு முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள். இதில் பொறாமை நயவஞ்ஞகம என்பவற்றிற்கு இடமில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. சம்பிக்க ரணவக்கையை பின்தள்ளி இனவாத்த்தை விதைப்பதில் முன்னணியில் இருப்பவர்தான் ஆசு மாறசிங்க.
    இவரின் பின்னால் தான் கடந்த அரசில் எமது சாணாக்கியமும் சஞ்சலமும் கோலோச்சியது.
    எல்லாப் பக்கமும் இனவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மகிந்த அவர்கள் அவரது பக்கத்தில் உள்ள இனவாதிகளை தனது பார்வையாலேயே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவராக காணப்படுகிறார்.

    ReplyDelete

Powered by Blogger.