Header Ads



விடுமுறையில் செல்கிறார் ரணில், சந்திப்புகளை தீவிரப்படுத்துகிறார் சஜித்

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பின்னடவைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச மீண்டும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்றி பெற்றதன் பின்னர் சஜித் பிரேமதாச மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொள்ளவில்லை. பொது நிகழ்வுகள் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் அவர் தவிர்த்து வந்தார்.

எனினும் அடுத்து பொதுத் தேர்தல் வரவிருப்பதால் அரசாங்கத்தைக் கைப்பெற்றும் நோக்கோடு மீண்டும் சஜித் களமிறங்கியுள்ளார். தனக்கு ஏற்பட்ட பின்னடைக்கு கட்சிக்குள் இருப்பவர்கள் தான் காரணம் என்று வெளிப்படையாகவே கூறிவரும் சஜித் பிரேமதாச, தான் பதவிகளுக்கு அடிபடமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தன்னுடைய கைகால்களை கட்டியே ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தினர் என்றும், கட்சிக்குள் இருப்பவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார் சஜித்.

இந்த நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய ஆலோசனைகளையடுத்து பல்வேறு திட்டங்களை வகுத்து தேர்தல் வியூகங்களை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்கு அளித்த மற்றும் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு வழங்கிய ஆதரவாளர்களை சஜித் பிரேமதாச சந்திக்க ஆரம்பித்துள்ளார். தொகுதி தொகுதியாக சென்று அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

நேற்று முந்தினம் கொழும்பு மாவட்டத்தில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அவரின் பயணம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது,

இதனையடுத்து குருணாகல் மாவட்டத்தில் நாளை ஆதரவாளர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் சஜித் பிரேமதாச குருணாகல் தேர்தல் தொகுதியில் 04 தொகுதியின் ஆதரவாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, டிசம்பர் 25ம் திகதி , நத்தார் தினத்தன்று மொனராகலை மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதியில் உள்ள ஐ.தே.க ஆதரவாளர்களை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார் எனவும் அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சஜித்தின் அரசியல் பயணத்தில் அவரின் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்தச் சூழ்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்குப் பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.