Header Ads



தைரியத்தை இழக்காது பாராளுமன்ற, தேர்தலில் வெற்றிபெற ஐதேக தயார் - சஜித்

ஜனாதிபதித் தேர்தல் பின்னடைவு தொடர்பாக தைரியத்தை இழக்காது,விரிவான கூட்டணியின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டவர்கள், தற்போது இந்த உடன்படிக்கையை ஆராய குழுவை நியமித்திருப்பது வியப்புக்குரிய விடயம்.

எம்.சீ.சீ. உடன்படிக்கையை செய்துக்கொண்டால், இலங்கை மக்கள் ஜயஸ்ரீ மஹாபோதியை வழிபட செல்ல அமெரிக்க தூதரகத்தில் விசா பெற வேண்டும், கடவுச்சீட்டை பெற வேண்டும் என தேர்தலின் போது கூறினார்கள்.

அப்படி கூறியவர்கள் உடன்படிக்கையின் நன்மை தீமை அறிய எப்படி குழுவை நியமிக்க முடியும். எம்.சீ.சீ. சோபா, எக்ஸா மற்றும் சிங்கப்பூர் உடன்படிக்கைகளை வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி மற்றும் ருவான்வெளிசேய முன்னால் துண்டு துண்டாக கிழித்தொறிய ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ENNA DAHIRIYAM ITHU.
    KATCHIYIL OTRUMAI ILLAI.
    VETRIYAI PATRI PESHUKIRAAN.
    MADAYANAAM MADAYAN.

    ReplyDelete

Powered by Blogger.