ஜூம்மா பள்ளியின் காணியில் புத்தர் சிலை - நீதிமன்றுக்கு செல்கிறது விவகாரம் - பாதுகாப்பு செயலாளரிடமும் முறையீடு
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனியஇ உடுகும்புற பிரதேச நூர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
இதகுறித்து நவமணி ஆசிரியர் என்.எம். அமீன் பொதுஐன பெரமுன கட்சி பிரபலங்களிடமும் முறையிட்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்னவின் கவனத்திற்கும் இது கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த புத்தர் சிலையை அகற்ற பிரதேச பொலிசார் நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத சிலை திடீரென்று தோன்றினாலும் அதனையும் அகற்ற நீதிமன்றத்தின் தீர்ப்புத்தான் வெண்டுமா? அது வேண்டுமென்றே வந்துள்ளதென்று பொலிசாருக்கு தெறியாதா?
ReplyDeleteபட்டிக்காட்டு மக்கள்.குறவர்கள்.