Header Ads



தன்னை சுற்றியுள்ளவர்களின் தேவைக்காகவே, ரணில் தலைமையை விட்டுக்கொடுக்காமல் உள்ளார்

கட்சி தலைமை தொடர்பான பிரச்சினையை ஜனவரிக்குள் தீர்த்துக்கொண்டு ஒரு அணியாக பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைந்துகொள்ள முடியாமல்போகும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க தன்னை சுற்றி இருப்பவர்களின் தேவைக்கவே தலைமை பதவியை விட்டுக்கொடுக்காமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறான தயார் நிலைகளை மேற்கொண்டுவருவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

No comments

Powered by Blogger.