Header Ads



அலரி மாளிகையில் ஆவணங்கள் பிடிபட்டதாக, வெளியான செய்தியை மறுக்கிறது ஐதேக

முன்னாள் அமைச்சர்களின் கொடுக்கல் வாங்கள் தொடர்பான ஆவணங்கள் சில முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுவதாக தெரிவித்து பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று  ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவரது பதவிகலாத்தில் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரே ஆவணங்களை தயாரித்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை.

ரணில் விக்கிரமசிங்க அவரது பதிவிக் காலத்தில் இவ்வாறு எந்த ஆவணங்களையும் தயாரிக்க வில்லை. பிரதமருக்குறிய கடமைகளை மாத்திரமே அவர் முன்னெடுத்திருந்தார். அவரது பதவி காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்திலும் அலரிமாளிகையிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. If what UNP says true, they should sue the media.

    ReplyDelete

Powered by Blogger.