"இன்புளுவன்சா வைரஸ்" தொடர்பில் எச்சரிக்கை
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் இன்புளுவன்சா வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காய்ச்சல், சளி போன்றன இந்த நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றன. குறித்த வைரஸ் தாக்கத்தை குறைப்பதும் நோய் தோற்றுவதை கட்டுப்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும்.
கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் கடுமையான பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இந்த நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெற வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயரட்ன கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment