Header Ads



உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை, இலங்கை இராணுவம் தோற்கடித்ததை சில நாடுகள் விரும்பவில்லை


விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்து வெளியேறும் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாதக் குழுவை சிறிலங்கா இராணுவத்தால் தோற்கடிக்க முடிந்தது.

உலகில் உள்ள படைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

எனினும், சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு  சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை.

ஆனால், அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும், அந்த நாடுகளில் உள்ள இராணுவம் சிறிலங்கா இராணுவத்தைக் குறித்து சாதகமான கருத்தைக் கொண்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.