Header Ads



ஜனாதிபதியை அவமதித்த சிங்கள, பாடகர் மேடையிலிருந்து வெளியேற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர் ஒருவர் மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரபல வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பிரபல பாடகரும் வயலின் வாசிப்பவருமான சித்ரால் சோமபால என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டமையினால் அங்கிருந்தவர்கள் ஊ கூச்சலிட்டுள்ளனர். இதனால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக குறித்த பாடகர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. PLEASE DONT SPREAD HATRED AMONGST COMMUNITIES!

    https://theleader.lk/news/1617-chithral-somapala-s-insulting

    ReplyDelete
  2. Dear Admins, why cant you publish my previous comment? If you make a mistake, then please be brave enough to correct it.

    ReplyDelete

Powered by Blogger.