Header Ads



மின்கம்பியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்


மாத்தளை, உக்குவெல்ல பகுதியில் உள்ள வயல் வெளியொன்றில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (29) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிள்ளைகளின் எதிர்ப்பை மீறி வயல் வெளியில் பொருத்தப்பட்ட மின்கம்பியை பரிசீலிப்பதற்காக 63 வயதுடைய தந்தை வயலிற்கு சென்றுள்ளார். 

பின்னர் தந்தை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் மனைவி மற்றும் மகனின் மனைவி ஆகிய இருவரும் வயலிற்கு சென்றுள்ளனர். 

இதன்போது மின்சாரம் தாக்கியிருந்த தந்தையை காப்பற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மனைவி மற்றும் மகனின் மனைவி ஆகிய இருவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.