Header Ads



அமெரிக்க இராணுவத்தளத்தில் சவுதி நாட்டவர் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி 8 பேர் காயம்


ப்ளோரிடாவின் பென்சாக்கோலாவில் ஏவியேஷன் பயின்று வரும் சௌதி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர், குறைந்தது 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரின் பெயர் முகமது சயீத் அல்ஷாம்ரானி என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் நோக்கத்தை இன்னும் எஃப்.பி.ஐ அறிவிக்கவில்லை, ஆனால் பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா உடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் ஒரே நாடக சௌதி அரேபியா விளங்குகிறது. நீண்ட காலமாக ராணுவ ஒப்பந்த திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன.

செளதி வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை "கொடூரமானது" என்று கூறியதுடன், விசாரணைக்கு "முழு ஆதரவையும்" வழங்கத் தயாராக இருப்பதாகவும் தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி 06:51 மணிக்கு பென்சகோலாவின் தென்மேற்கு நீர்முனையில் உள்ள ஒரு வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

செரிப்பின் துணை அதிகாரி, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரைச் சுட்டுக் கொன்ற போதுதான் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.

''தாக்குதல் குறித்து விவரிக்கும்போது, திரைப்படம் போல எனக்குத் தோன்றுகிறது'' என எஸ்காம்பியா கவுண்டியின் ஷெரிப் டேவிட் மோர்கன் கூறுகிறார்.

பென்சகோலாவின் கடற்படை விமான நிலையத்தில் 16,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் ,மற்ற துறைகளில் 7,400 பேர் பணியாற்றுவதாக அதிகாரபூர்வ் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகமது சயீத் அல்ஷாம்ரானி சௌதி விமானப்படையில் இரண்டாவது லெப்டினெண்டாக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தின் அருகே இருந்த பல சௌதி நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோளிட்டு நியூயார்க் நேரம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சமீபத்திய வாரங்களில் 18 சௌதி கடற்படை விமானிகள் மற்றும் இரண்டு விமானக் குழு உறுப்பினர்கள் பென்சகோலாவில் பயிற்சி பெற்று வந்தனர் என்று அமெரிக்கக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

ஃப்ளோரிடாவின் முன்னாள் ஆளுநரான செனட்டர் ரிக் ஸ்காட், அமெரிக்க மண்ணில் பயிற்சி பெற்று வரும் வெளிநாட்டு இராணுவ வீரர்களுக்கான திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். நமக்குத் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

செளதி பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் காலித் பின் சல்மான், ''செளதி இராணுவத்தில் உள்ள பலரைப் போலவே அவரும் அமெரிக்க தளத்தில் பயிற்சி பெற்றதாகக் கூறுகிறார்.''

No comments

Powered by Blogger.