மழைக்கு வந்த பாம்பு தீண்டி, 10 வயது சிறுமி பலி
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில் பாம்பு தீண்டியதால் சிறுமி 10 வயது பலியாகியுள்ளார்.
சேர்ந்த உன்னிச்சை 6ம் கட்டை பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும், கேசவமூர்த்தி மதுசினி எனும் 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்த துயரமிகு நிகழ்வினால் நெடியமடு கிராமமே சோகத்தில் மூழ்கிய நிலையில் சிறுமியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) அடக்கம் செய்யப்பட்டது.
பாம்புக் கடிக்குள்ளான சிறுமி மயக்கமான நிலையில் வாந்தி எடுத்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாம்புக் கடிக்குள்ளான சிறுமி முன்னதாக கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செயல்லப்பட்டு பின்னர் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் கே. சுகுமாரினால் உடற் கூறாய்வுப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
துயரத்தில் உள்ள குடும்ப்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDelete