Header Ads



சஜித்தின் தேர்தல், விஞ்ஞாபனம் ஆபத்தானது - மகிந்த எச்சரிக்கை

ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஷ்டிக்கு எதிராக செயற்படுவதற்கான எழுத்து மூல உறுதிப்பாட்டை மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் பிரதமரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கிவிட்டு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவையாகும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து இன்று -06- புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

1 comment:

  1. இவருக்கும், இவரை சார்ந்தவர்களுக்கும் இறைவன் நல்ல பாடம் புகட்ட பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.