Header Ads



வெள்ளைக்காரியைக் கொன்ற மரண தண்டனைக் கைதிக்கு மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி மைத்திரி


கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோனி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அவரை விடுதலை செய்தவற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பந்தமான வழக்கில் ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இந் நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளதுடன், அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

ஜானதிபதி கையெழுத்திட்ட இந்த ஆவணங்கள் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் ஜூட் அந்தோணி ஜயமஹாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. தன்னுடைய சொந்தங்களில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் இது நடக்குமா?
    பாபர் மஸ்ஜித் தீர்ப்பு போல் ஒன்றுதான் இதுவும்.
    கொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரியின் உளக்குமறலை பாரத்த எவருடைய உள்ளமும் கனத்து விடும்.
    ஏன் இந்த ஓர வஞ்சனை.

    ReplyDelete
  2. ​கொலைக்குக் கொலை செய்யவும் குடுகாரன்களையும் ஸ்திரி தூஷன காரன்களையும் கொலை செய்ய வந்த சனாதிபதி தனது பதவிகாலத்தின் இறுதியில் கொலைகாரன்களை மன்னித்துவிட்டுத் தொலையப் பார்க்கின்றான்.

    ReplyDelete
  3. இதுவெல்லாம் சகஜம்தான்

    ReplyDelete
  4. Releasing the Killers BUT Arresting innocents .. This is MY3 his alliance

    ReplyDelete

Powered by Blogger.