Header Ads



UNP யின் பிரதி தலைவர் பதவியிலிருந்து விலகினார் சஜித் - தோல்வியை ஏற்றுக்கொண்டு, கோத்தாவுக்கு வாழ்த்து


புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

தோல்விக்குப் பொறுப்பேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாகவும்  அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், எவ்வாறாயினும் மக்களை சேவையை தொடரவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


3 comments:

  1. நாமும் அடுத்த ஜனாதிபதியை வாழ்த்துவோம்

    ReplyDelete
  2. ஒட்டு மொத்த முஸ்லிம்களின் அபிலாசைகளும் உரிமைகளும் பர்தாக்களும் பள்ளிகளும் கல்லூரிகளும் பாடசாலைகளும் என்னவாகும் என்ற சொல்லொண்ணா ஏக்கத்தோடும் துக்கத்தோடும் -கண்ணீர் மல்க இன்று பகுத்தறிவான முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர்
    யா அல்லாஹ்வே எம்மை பாதுகாக்க நீயே போதுமானவன்- ரப்பே நீ எது செய்தாலும் எமக்கு நல்லதையே செய்வாய்- அந்த நல்லவற்றை எமக்கருளிடுவாயாக ரஹ்மானே- மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete
  3. நேர்மையான அரசியல் வாதி...

    ReplyDelete

Powered by Blogger.