Header Ads



பொலன்னறுவையில் போட்டியிடுகிறார் மைத்திரி - அமோக வெற்றி பெற வையுங்கள்


அடுத்த பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியொருவர் எவ்வாறு செயற்பட வேண்டும், அவரின் பதவி நிலை என்ன என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. நாட்டு மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். சிலர் விமர்சிக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்கள் அவரை நேசிக்கின்றனர்.

அரசியலில் இருந்து அவர் ஒதுங்கவில்லை. அடுத்த பொதுத்தேர்தலில் இந்த மாவட்டத்தில் (பொலன்னறுவையில்) போட்டியிடுவார். அமோக வெற்றி பெற வையுங்கள்." என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.