Header Ads



ஜனாதிபதி தேர்தலை, பகிஸ்கரிக்குமாறு துண்டுப் பிரசுரங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி வடமாகாணத்தில் இன்றைய தினம் -07-துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரினால் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிகப்பட்டன.

இதேவேளை, எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி வடமாகாணத்தில் இன்றைய தினம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. 2005ன் பகிஸ்கரிப்பால் ஏற்பட்ட விளைவு மக்களுக்கு நினைவில் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.