Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலுள்ள, பிரதான சூத்திரதாரி கோத்தபாயவே - அமைச்சர் சந்திராணி

தமிழ், முஸ்லிம் மக்கள் அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி வாக்களிப்பதாக அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

அதனை பொறுத்துக் கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாத பொதுஜன பெரமுனவின் கோத்தபாயவாதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை அபகரிக்க போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம், கஹடகஸ் திஹிலிய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சூத்திரதாரி வேறு யாரும் அல்ல. அது கோத்தபாய ராஜபக்சவே.

முஸ்லிம் மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மீது இருக்கும் நம்பிக்கையை இல்லாதொழிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் கோத்தபாய ராஜபக்சவே திட்டவட்டமாக செயற்பட்டுள்ளார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு எதையும் செய்ய துணிந்தவர்கள். அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது குற்றம் சுமத்தி நாட்டில் பாரிய கலவரத்தை ஏற்படுத்த கோத்தபாய மேற்கொண்ட முயற்சி எமது அரசாங்கத்தால் முறியடிக்கப்பட்டது.

இல்லையெனில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையே பாரிய யுத்தமொன்று ஏற்பட்டிருக்கும். நாட்டு மக்கள் மீதோ, நாட்டிலுள்ள சமூகங்கள் மீதோ எந்தவித அக்கறையும் ராஜபக்ச கும்பலுக்கு இல்லை.

எத்தனை உயிரையும் மாய்த்தாவது ஆட்சியை கைப்பற்றுவது அவர்களின் குறிக்கோளாக அமைந்துள்ளது. நாட்டில் தற்போது அனைவருக்கும் சுதந்திரம் காணப்படுகிறது. ஜனநாயகமும் காணப்படுகிறது.

மக்களுக்கு பேச்சு சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் அதேபோல ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. அவ்வாறு இருப்பதால் தான் குறிப்பிட்ட இரு ஊடகங்கள் கோத்தபாய ராஜபக்சவிற்காக 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.

அதற்கு காரணம் என்னவென மக்கள் நன்றாக அறிந்துள்ளார்கள். ஏனெனில் இந்த ஊடகங்களின் தலைவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கு போதைப்பொருளை கொண்டு வந்தவர்கள் இருவர்கள் தான். இந்த போதைப்பொருள் வர்த்தகர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக இவர்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி இருந்த காலகட்டத்திலும், அரச நிறுவனங்களின் விளம்பரங்கள் கூட இந்த இரண்டு ஊடகங்களில் மாத்திரமே ஒளி, ஒலி பரப்பப்பட்டன.

எனவே தமது வருமானத்தை அதிகரித்து கொள்ளவே இவர்கள் கோத்தபாயவிற்கு ஆரவளித்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. நாட்டில் இவர்களை விட தந்திரம் படைத்த மாபெரும் அறிவியல் மேதைகள் உள்ளார்கள். எல்லோருக்கும் இந்த மோடி அரசியல் புரியும்.

    ReplyDelete
  2. Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa!

    ReplyDelete
  3. நிச்சயமாக!!!

    ReplyDelete
  4. YES we also accusing him

    ReplyDelete
  5. WHY THE GOVERNMENT NOT ARREST HIM, IF THERE ANY MISS CALL THEY ARE ARRESTING MUSLIM WHY THEY DONT ARREST AND INVESTIGATE

    ReplyDelete

Powered by Blogger.