Header Ads



இரத்தினபுரியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - பொலிஸார் தீவிர விசாரணை, 2 பேர் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

 நேற்று -18- இரத்­தி­ன­புரி மாவட்டம், நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகு­தியில் பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.  முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வந்­த­வர்கள் இந்த தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ள­தா­கவும் இதன்­போது பள்­ளி­வா­சலின் கண்­ணா­டி­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்­பவம் குறித்து நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நிலையில் நேற்று சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி  முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்­டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடாத்­து­வது வெளிப்­பட்­ட­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர்கள் கைது செய்­யப்பட்­ட­தா­கவும் பொலிஸார் கூறினர்.

நிவித்­தி­கல, கல­வான வீதியிலுள்ள குறித்த கெட்­ட­னி­கே­வத்த பள்­ளி­வாசல் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவரில் ஒருவர் நிவித்திகல பகுதியில்  மோட்டார் வாகன திருத்துநர் எனவும் சந்தேக நபர்கள் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

2 comments:

  1. But very soon he`ll reliase and file closed.

    ReplyDelete
  2. Never.. Everything will be controlled. hopefully unlike UNP's bloody government.

    ReplyDelete

Powered by Blogger.