Header Ads



அனுரகுமார ஜனாதிபதியானால் Mp க்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும்

கடந்த 71 வருடங்களில் நாட்டின் கட்சிகளின் நிறங்கள் மாறினாலும் நாடு மாறவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து நோர்வூட் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல், சகல சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொண்டு மக்களை நிராகரிக்கின்றனர். அந்த அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியமும் கிடைக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் குறைப்பட்டு, ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் எனவும் கே.டி. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.