Header Ads



சகல பள்ளிவாசல்களையும் பாதுகாப்பதற்கு, எனக்கு வாக்களியுங்கள் - சஜித் வேண்டுகோள்


கிண்ணியா நகரத்தை மெகா சிடியாக மாற்றுவேன் எனவும் 24 மணுத்தியாலங்கள் உடனடியாக செயற்படும் விதத்தில் ஜனாதிபதி மையம் ஒன்றினையும் நிறுவுவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கிண்ணியா நகரசபை பொது மைதானத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வரையறைக்குற்பட்ட மீன்பிடியை  தங்கு தடையின்றி செய்வதற்கு நடவடிக்கையினை எடுப்பேன் எனவும், இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நோக்குடன் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில்நுட்ப கல்லூரிகளை நிர்வகிப்பதுடன், தகவல் தொழில்நுட்ப துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவேன் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். 

அத்துடன் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச சீருடை வழங்குவதுடன் பகல் நேர உணவுகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறினார். 

மேலும் ஏழ்மையை நாட்டிலிருந்து நீக்குவதற்காக சமுர்த்தி திட்டம் போன்று ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஜனசவிய வேலைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பித்து வைப்பேன் எனவும் அனைத்து பள்ளிவாசல்கள் பாதுகாப்பதற்கு தனக்கு வாக்களிக்குமாறும் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார். 

2 comments:

  1. அப்போது உடைக்கும் போது என்ன புடிங்கிட்டா இருந்தீங்க.

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு பிரச்சினை நேரங்களில் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லியிருந்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.