Header Ads



கோத்தபாய வெற்றி பெற்றபிறகு அவருக்கு, வாக்களிக்காத முஸ்லிம்களைத் தாக்குவார்கள்

தவறியேனும் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானால், நிச்சயமாக மற்றொரு இராணுவ சகாப்தம் உருவாக்கப்படும் என்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் -29- நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

தவறியேனும் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானால், நிச்சயமாக மற்றொரு இராணுவ சகாப்தம் உருவாக்கப்படும்.

கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பிறகு, தனக்கு வாக்களிக்காத முஸ்லிம்களைத் தாக்குவார்கள். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கான திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வகுத்திருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு, கோத்தபாயவுக்கு வாக்களிக்காதவர்களை பழிவாங்குவார்கள் என்பது தெளிவாகிறது, அதே நேரத்தில் சர்வாதிகாரத்தின் கீழ் முழு அதிகாரத்தையும் தனது வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தார் கோத்தபாய.

எனவே கோத்தபாய ராஜபக்ஷ தவறுதலாக வென்றால், மற்றொரு இராணுவ சகாப்தம் நிச்சயமாக உருவாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

2 comments:

  1. Neengal mattum enna seytheergal? Digana, Ampara, Galle, Negombo, Kuliyapitiya.. enru adukkikkonde pohalam.

    ReplyDelete

Powered by Blogger.