Header Ads



பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மீது தாக்குதல் -

பெல்மடுல்ல நகரில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 

நேற்று (16) பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த இரண்டு நபர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.