Header Ads



ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ திங்களன்று வெளியீடு


‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கம் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை மாலை அதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதுடன், தேர்தல் விஞ்ஞர்பனம் தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்  

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞர்பனத்தில் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதார கட்டமைப்பு, முஸ்லிம்களின் சமய விவகாரம், சுகாதார வசதி வாய்ப்புக்கள், கல்வி, பள்ளிவாசல்கள்,இமாம்கள், முஅத்தின்களுக்கான விசேட திட்டம், நிர்வாக – காணி பிரச்சினைகள உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. Hisbullha! The entire SL Muslims are watching your dupe! Don,t try to execute MR & Co Back up plan!

    ReplyDelete
  2. He changed the black money white money and did illegal money laundering and he has to repay the MP wages if the caae against him is heard in the future.beinga corrupt, save his skin he joined with horu in order to split the votes.however katankudy voters are more than smart to ignore this man.

    ReplyDelete

Powered by Blogger.