Header Ads



உயிரை பறிக்கும் அரசாங்கத்தை தெரிவு செய்வதா? அல்லது உயிரை காப்பாற்றும் அரசாங்கத்தை தெரிவு செய்வதா??

உயிரை பறிக்கும் அரசாங்கத்தை தெரிவு செய்வதா? அல்லது உயிரை காப்பாற்றும் அரசாங்கத்தை தெரிவு செய்வதா? என பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் இன்று (24) கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்திருந்தார். 

சிறுபான்மை அதிகாரத்தை கொண்ட அரசாங்கமாக இருந்த போதிலும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றி சுயாதீன ஆணைக்குழுவை உருவாக்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்தமையை மிகப்பெரிய சாதனையாக கருதுவதாக பிரமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார். 

இதன் காரணமாக சுதந்திரமான சமுதாயத்தை உருவாக்க முடிந்ததாக அவர் தெரிவத்தார். 

இதுவரை இருந்த அரசாங்கங்களை விட ஊடக சுதந்திரத்தை மிகவும் சிறப்பாக பாதுகாத்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.