வீதியோரங்களில் வாகனத்தை நிறுத்தாதீர்கள் - குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் வருவார்கள்
இயந்திர கோளாறுகள் காரணமாக வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்கள் தொடர்பில் அடையாளம் உறுதிபடுத்தப்படாது விட்டால் அவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் படைப்பிரிவினரை கொண்டு சோதனைக்கு உட்படுத்துவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அடையாளம் உறுதிப்படுத்தபடாமல் வீதியோரங்களில் நிறுத்தி செல்லும் வாகனங்களினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலைமையை கட்டுபடுத்துவதற்காக, இவ்வாறு வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்பவர்கள் அவர்களின் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்போது இயந்திர கோளாறுகள் காரணமாக வாகானத்தை நிறுத்தி செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டால். அந்த வாகனத்தினதும் , பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் வாகனத்தின் அருகில் ஒருவர் இருக்கலாம். அல்லது இவ்வாறு இருக்கமுடியாத சந்தரப்பத்தில் 119 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கும் வாகனத்தின் இலக்கத்தையும் , இடத்தையும் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.
அதேவேளை இவ்வாறு நிறுத்தி வைக்கப்படும் வாகத்தின் பின் புறத்தில் அல்லது முன்புறத்தில் சாரதியின் தொலைப்பேசி இலக்கத்தை காட்சிபடுத்திருத்தல் வேண்டும். அவ்வாறு அடையாளம் உறுதி படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment