பிளவுபட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், நாங்கள் தோல்யுற்றிருக்கின்றோம் - ரணில்
பிளவுபட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் நாங்கள் தோல்யுற்றிருக்கின்றோம். அதனால் நான் தலைவராக இருக்கும்வரை கட்சியை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அடுத்து பொதுத்தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்றிபெறுவதே எமது நோக்கம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கவேண்டும். ஜனாதிபதியும் அமைச்சரவையும் நாங்கள் அமைப்பதற்கு 125 உறுப்பினர்களுடன் பொதுத்தேர்தலை வெற்றிகொள்ள உறுதிகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கட்சி சம்மேளனம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட கூட்டம் இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment