கோத்தபாயவைக் கண்டு, நாம் அஞ்சவில்லை - ஹரீன்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கண்டு தாம் அஞ்சவில்லை என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோத்தபாய ராஜபக்சவை கண்டு அஞ்சவில்லை என்பதனை தெளிவாக கூற விரும்புகின்றோம். கோத்தபாய அல்ல, மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டாலும் எங்களுக்கு பிரச்சினையில்லை.
கோத்தபாய ராஜபக்சவை தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்கு வழக்கு தொடரப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை, கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதனையே நாமும் விரும்புகின்றோம்.
நான் விளையாட்டுத்துறை அமைச்சர், ஓட்டப் போட்டி என்றால் முதலில் தகுதிகாண் போட்டிகள் நடைபெறும்.
தகுதிகாண் சுற்றில் ஓடிவிட்டு, போட்டியில் ஜெயித்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நபர்கள் நாமில்லை. நாம் சரியான நேரத்தில் சரியான வியூகங்களுடன் போட்டியில் இறங்கி வெற்றியீட்டுவோம்.
ஐக்கிய தேசிய இளைய சக்தி மிக்க ஓர் தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளது. எனவே நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment