Header Ads



சஹ்ரானிடம் பயிற்சி, பெற்றதாக ஒருவர் கைது

தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயிற்சி பெற்றிருந்த மொஹமட் ஜெம்சிட் என்ற காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த தினத்தன்று கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

அவரின் தொலைப்பேசி இலக்கத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் பின்னர் இந்த பயங்கரவாதி குழுவுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (03) இரவு பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

20 வயதுடைய மொஹமட் வசீம் என்ற அபூமஸ்வூட் என்ற மாவனெல்லை, பூடாவ வீதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். 

சந்தேகநபர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பயிற்சிகளில் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அவர் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.