Header Ads



குடும்பத்தினர் வெளிநாட்டில் - தந்தையை இழுத்துச்சென்று விழுங்கிய முதலை

மாத்தறையில் நபர் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்று விழுங்கிய சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டுவேகொட பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இரவு வேளையில் வீட்டிற்கு பின்னால் குளிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் திடீரென வந்த பாரிய முதலை நில்வளா கங்கை நோக்கி அவரை இழுத்து சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை முதலை இழுத்துச் செல்வதனை அந்தப் பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் குறித்த நபரின் ஆடை மற்றும் பாதணி மாத்திரமே கரை ஒதுங்கியுள்ளது.

இந்த நபரின் மனைவி மற்றும் மகன் வெளிநாட்டில் வசிக்கின்றனர். நேற்றைய தினம் அந்த பகுதி மக்கள் அவரது உடலை தேடிய போதிலும் அதனை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. உடலை முழுமையாக முதலை விழுங்கியிருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.