மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்றைய -04- தினம் மாலை ஆறு மணியளவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று காலை முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வெளியாகவுள்ள குறித்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
அத்துடன், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment