Header Ads



இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதற்கு, சிறந்த தலைவரை தெரிவு செய்யுங்கள்

சர்வதேச மட்டத்தில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் முதுகை நிமிர்த்தி நாட்டை பாதுகாக்க கூடிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சுனேத்ரா மஹாதேவி பிரிவெனவின் விரிவுரையாளர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஜாதிக வியத் பவுர அமைப்பின் மாநாடு திருகோணமலை நகராட்சி மன்றத்தில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

முத்து, கஸ்தூரி, தந்தம் அனைத்தும் திருகோணமலையில் காணப்படுகின்றன. திருகோணமலை நகரம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் பிரபலமான, வருவாயை ஈட்டித்தரக்கூடிய ஒரு நகரமாகும்.

இந்த நகரத்தில் நாங்கள் இன நல்லுறவை வலுப்படுத்தி சிறந்த ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

காற்பந்து விளையாடக்கூடிய ஒரு தலைவரை நியமிப்பதை, விடவும் சர்வதேச மட்டத்தில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் முதுகெலும்பை நிமிர்த்திய வண்ணம் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய ஒரு தலைவரை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

எமது நாட்டில் அனைத்து மக்களும் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதற்கு சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் ஒரு கருத்தையும், உள்நாட்டில் வேறு கருத்தையும் கூறக்கூடிய தலைவரை நாங்கள் நியமித்தால் நாடு விளைவுகளை நோக்கி செல்லும்.

சிறந்த தேர்வினை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.