Header Ads



எனக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு, கோத்தாபய பதில் கூற வேண்டும் - ஹிருணிகா

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்லும் போது பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு கோத்தாபய ராஜபக்ஷ பதில் கூற வேண்டும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு இவ்வாறான ஆராஜகமான ஆதரவாளர்களுடன் எவ்வாறு ஒழுக்கமுடைய நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று கோத்தாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஹிருணிகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.