Header Ads



தேசியப் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் என்னால் மட்டுமே முன்னெடுக்க முடியும் - கோட்டாபய

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஹக்மன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மிளகு, பாக்கு போன்றவற்றை இந்நாட்டிற்கு எடுத்துவந்து மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை முழுமையாக நிறுத்தி உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பு அல்லது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல தன்னால் மாத்திரமே முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மேற்கொண்ட மிகச்சிறந்த உதாரணம் தான் கொழும்பு சென்ஜோன்ஸ் மீன் மார்க்கட்டை உடைத்து எறிந்து விட்டு அங்கு அவருடைய அடிவருடிக்களுக்கு நகைக்கடைகள் அமைத்துக்கொடுத்தார். ஒருசில மாதங்கள் போகவில்லை. அத்தனை கடைகளுக்கும் மூடுவிழா. இதுதான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் கோதாபொருளாதாரக்கொள்கை, இன்னும் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு.மேலே கூறியது மிகச் சிறந்த உதாரணம்.

    ReplyDelete

Powered by Blogger.