Header Ads



தேர்தல் விஞ்ஞாபனத்தை 26 இல் வெளியிடுகிறார் அநுரகுமார

தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் கொள்கை அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் இந்த கொள்கை அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றாடல் போன்ற அனைத்து துறைகள் குறித்தும் கொள்கை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.