Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நவம்பர் 16 ஆம் திகதிவரை நிறுத்தம் - அதன்பின் தொடரும் - எச்சரிக்கிறார் மஹேஸ் சேனாநாயக்க


முஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த, விரோத மனப்பான்மையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் திடீரென காணாமல் போய் விட்டதாக தேசிய மக்கள் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை சமூக வலைத்தளங்களில் தினமும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, 15 நிமிடத்திற்கு ஒரு முறை என முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகையை உருவாக்கும் பதிவுகளே காணப்பட்டன.

தம்பியா, ஹலால் என அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திடீரென ஓகஸ்ட் மாதம் முதல் அவை காணாமல்போய்விட்டன. தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வருவதில்லை. ஏன் வருவதில்லை.

அதனை செய்த நபர் தேர்தலில் போட்டியிடுவதால், அவை வருவதில்லை. அந்த நபர், நான் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறேன் என ஓகஸ்ட் மாதம் கூறினார்.

இதனையடுத்தே முஸ்லிம் மக்களுக்கு எதிரான பதிவுகள் நிறுத்தப்பட்டன. நவம்பர் 16 ஆம் திகதி வரை மாத்திரமே அவர்கள் அதனை நிறுத்தியுள்ளனர்.

அந்த வேட்பாளரும், அவரை சுற்றி இருப்பவர்களுமே இதனை செய்து வந்தனர். அப்படியில்லை என்றால், ஓகஸ்ட் மாதத்துடன் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பதிவுகளை நிறுத்த வாய்ப்பில்லை.

அவை தற்போதும் இருந்திருக்க வேண்டும். இதுதான் சேறு நிறைந்த, மோசமான குடும்ப அணிகளின் திருடர்கள் இணைந்துள்ள அரசியல்.

அதேவேளை நாட்டுக்குள் ஒரே சட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும். அதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

2

මුස්ලිම් විරෝධී රැල්ලක් මතුකළ කල්ලි කණ්ඩායම් වල නායකයා ජනාධිපති අපේක්ෂකයකු ලෙස ඉදිරිපත්වීමත් සමග
ශ්‍රී ලාංකීය මුස්ලිම් ජනයාට එරෙහිව කලක පටන් ක්‍රියාත්මක වූ වෛරී ප්‍රකාශන හා තර්ජන ගර්ජන වහාම අතුරුදන් වූ බව 'ජාතික ජනතා ව්‍යාපාරයේ' ජනාධිපති අපේක්ෂක ජෙනරාල් මහේෂ් සේනානායක පවසයි.

තවදුරටත් ඒ ගැන කරුණු පැහැදිලි කළ හිටපු හමුදාපතිවරයා මෙසේ පැවසිය.

''පාස්කු ඉරිදා සිද්ධියෙන් පස්සේ අගෝස්තු මාසේ වෙනකන්ම සමාජ මාධ්‍ය බැලුවොත් දිනපතා පැයෙන් පැයට විනාඩි පහළොවෙන් පහළොවට මුස්ලිම් ජනතාව කෙරෙහි වෛරය ඇති කරන පෝස්ට් තමයි තිබුනේ. තම්බියාද හලාල්ද කියන හැම වචනයක්ම පාවිච්චි කරමින් වෛරය ඇති කරනවා. එකපාරටම ඒක අගෝස්තු මාසේ නැති වෙනවා. 

දැන් ඔබතුමා කියන්න අද ඔබට මුස්ලිම් විරෝධී පෝස්ට් ආවද නැද්ද කියලා. දැන් එන්නේ නැහැ. ඇයි එන්නේ නැත්තේ. ඒක කරපු පුද්ගලයා ඡන්දය ඉල්ලන නිසා මේ පාර. මම නැවත වතාවක් කියනවා ඒක කරන පුද්ගලයෝ අගෝස්තු මාසයේ නාමයෝජනා ඉදිරිපත් කරලා මම තමයි ඡන්දය ඉල්ලන්නේ කියලා. ඔවුන් ඒක නැවැත්තුවේ මේ නොවැම්බර් 16 වෙනිදා ඉඳලා.

අද මම ඒක ප්‍රකාශ කරනවා ඒ මහත්මයා සහ එයාගේ වටපිටාවේ ඉන්න පිරිස තමයි මේක ඇති කරේ නැත්නම් අගොස්තු මාසේ ඕක නවතින්න බැහැ, තවමත් තියෙන්නට ඕනේ. ඒක තමයි මේ දේශපාලනයේ මඩ ජරාජීර්ණ වූ පවුල් කණ්ඩායම් සොරුන් එකතු වූ දේශපාලනය.''

එක රටක් එක නීතියක් යට‌තේ වහාම ස්ථාපිත කලයුතු බවත්, මේ සඳහා අලුතින් නීති රීති ගෙන ආ යුතු බවත් මහේෂ් සේනානායක හිටපු හමුදාපතිවරයා  අවධාරණය කර සිටියේය.

2 comments:

  1. இந்த செய்தியில் என்ன ஆச்சரியம்?
    இது எல்லாரும் தெரிந்த விடயம் தானே.

    ReplyDelete
  2. மஹேஸ் சேனநாயக்க அவர்கள் இலங்கையிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய தலைசிறந்த மனிதர்களுல் நிர்வாகிகளுல் ஒருவர். இவருடைய முன்னறிவுதான் (Fore-knowledge) கடந்து சென்ற இனவாதப் பிரச்சினைகளுல் முஸ்லிம்களுக்கு வரவிருந்த பெரும் அபாயம் நீக்கப்பட்டமைக்குக் காரணமாயிற்று. இதனை முஸ்லிம்கள் மாத்திரமல்ல வேறு எந்த இனத்தவராலும் கூட மறுக்க இயலாது. அன்னார் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியிருப்பது முழு முஸ்லிம் சமூகத்தினருக்கும் பெரு மகிழ்ச்சி. அன்னார் ஜனாதிபதியானால் நீதி நியாயமாக எல்லாரிடத்திலும் நடப்பார் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் சிங்கள மக்களின் வாக்குகளில் குறைந்தது 45% ஐப் பெறும் ஒருவரே வெற்றிபெறக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது. அத்தனை வாக்குகளையும் மஹேஸ் அவர்களினால் பெறக்கூடிய விதத்தில் பந்தயத்தில் சுழிக்க முடியுமா? அப்படியான சந்தர்ப்பம் நிகழுமிடத்து முஸ்லிம் மக்களின் பெரும் ஆதரவு அன்னருக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.