UNP சார்பில் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடத் தயார் - கரு அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
நாட்டின் நன்மை கருதி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவில் சமூக பிரதிநிதிகள் இன்று .06- தம்மை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுத்ததாக சபாநாயகர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பிளவுபடுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்தால், கட்சியின் சார்பில் களமிறங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இதற்கு முன்னர் மதத்தலைவர் உட்பட பல தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார போராட்டத்தில் நானும் இணைந்து கொள்ள விரும்பவில்லை. எனினும் சாதகமான இணக்கம் வெளியிட்டால் போட்டியிடுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment