Header Ads



நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கிலேயே, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நியமிக்கப்பட்டார் - ரணில்

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமித்தமைக்கான காரணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று -29-nசிவில் அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் சில வருடங்கள் எங்களுக்கு முக்கியமானதாகவும், அதற்கு நாங்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது அவசியமாகும்.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்று அதிகாரத்தை பெற வேண்டும். அதற்கு எங்களுக்கு சஜித் போன்ற வேட்பாளரே நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அத்துடன் நாடு பெற்றுள்ள சுதந்திரத்தை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வது சிவில் அமைப்பினரது பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. காலம் கடந்த ஞானம் செரி பரவாயில்லை தப்பிவிட்டீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.