சுயேட்சையாக களமிறங்குவாரா சஜித்..?
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.
சிங்கள பத்திரிகையை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க களமிறங்குவதற்கு தயாராகி விட்டதாகவும் தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக இதுவரையில் எவரையும் பெயரிடாத நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முயற்சிகள் கைகூடாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாச சுயேட்சையாக களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக ஐதேகவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment