அலரிமாளிகை, அமைச்சுக்களை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம் - ரணில் உத்தரவு
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அலரிமாளிகையையோ அல்லது அமைச்சுக்களின் அலுவலகங்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் பிரமுகர்களுக்கும் அறிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவிலும் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் மேற்கொள்ளுமாறும் கொழும்புக்குள் வேண்டுமானால் புதிய அலுவலகம் ஒன்றிணை அமைக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெ ளியிடப்பட்டுள்ள நிலையில் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது.
சிறிகொத்தாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக்குழுக்கூட்டத்தின் போது தேர்தல் நடவடிக்ககைகளுக்கு அலரிமாளிகையையோ அமைச்சுக்களையோ பன்படுத்தவேண்டாம் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment