Header Ads



சஜித்திற்கு வாய்ப்பு வழங்காவிட்டால், நான் மீண்டும் ஆசிரியர் தொழிலுக்குச் செல்வேன் - நளின்

சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளருக்கான வாய்ப்பு வழங்கப்படாது போனால் தாம் பதவிவிலகி மீண்டும் ஆசிரியர் தொழிலுக்கு செல்லப்போவதாக அபிவிருத்தி மூலோபாய பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் வெற்றி பெறவேண்டுமானால் சஜித் பிரேமதாசவே அதற்கு பொருத்தமானவர் என்றும் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று பொதுமக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர் ஜனாதிபதியானால் வறுமையை ஒழித்து அபிவிருத்தியை கொண்டு வருவார்.

1 comment:

  1. அப்பாவி மாணவர்களை வழிகெடுக்காமல் வீட்டில் அல்லது காட்டில் முடங்கிக் கிடந்தால் இந்த நாட்டு மக்களுக்கு செய்யும் பெரியதொரு சேவையாக அமையும்

    ReplyDelete

Powered by Blogger.